தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் ஆனது நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவ்வாறு போட்டிட்ட இரு பெரும் கட்சிகளாக தமிழத்தில் காணப்படும் திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிகள் அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் திருவிழா என்றாலே ஆட்டத்திற்கு பாட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது அதில் பணத்தின் அதிக்கம் அளந்து கூறமுடியாத அளவிற்கு அலையாக ஓடும் அவ்வாறு மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் வாக்குகளை வேட்பாளர்கள் விளைக்கு வாங்கி ஜெயிக்கும் அவலம் ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு தான் வருகிறது அதனை கண்கள் இருந்து குருடர்களாகவே அதிகாரிகள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அதனை நிருபிக்கும் விதமாக இங்கு ஒரு கூத்து அரங்கேறியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழப்பளையூர் கிராமத்தில் கீழப்பளையூர் கிராமத்தில் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிய வேட்பாளருக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர் வாக்காளர்கள் இதனால் கடும் விரக்தி அடைந்த வேட்பாளர் “காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டியா?” போஸ்டரில் தனது ஆதங்கத்தை அதில் கொட்டி தீர்த்து உள்ளார். வேட்பாளரால் ஓட்டப் பட்ட இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும்,பேசும் பொருள் ஆகியும் உள்ளது.
இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…