கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் நபருக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதிலும் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுவையில் தினமும் 3000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதுச்சேரி அரசும் கையாண்டு வருகிறது.
இந்நிலையில், வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவேண்டும். கையுறைகள் பயன்படுத்த வேண்டும், சுகாதாரமாக இருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனை மீறி நோய்த்தொற்று பரவுவதற்கு காரணமாக இருக்கக் கூடியவர்கள் மீது 2020 பிரிவு 4 ஏ இன் கீழ் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் என அபராதம் வசூலிக்க தற்போது சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி விதிகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தனிமையிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் இந்த விதிமுறைகளை மீறும் பொழுது ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் எனவும், புதுவை மாவட்ட கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…