சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஏழை, எளியவர்களுக்கு இலவச திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் மணமக்களுக்கு 4 கிராம் தங்கம், வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், ஸ்டவ், பாய், தலையணை, போர்வை, பெட்டி, உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், 2020-2021ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 795 பேருக்கு, 415 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…