இதை அதிகாரப்பூர்வமாக நிரூபித்தால் ரூ.1,00,00,000 கோடி பரிசு.! பாஜக சார்பில் போஸ்டர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு என நூதன போஸ்டர் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. இதில் பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், சமூக தொண்டர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பாஜகவினர் நூதனமான சுவர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் 1 கோடி சேலஞ்ச என்ற தலைப்புடன் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமகன்களில் யாராவது பாதிப்படைந்துள்ளார் என்று ஆதாரபூர்வமாக நிரூபித்தால் ரூ.1,00,00,000 கோடி பரிசு வழங்கப்படும் என பாஜக சார்பில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாவட்டச் செயலாளர் தங்கவேல் வழக்கறிஞர் பிரிவு என அச்சிடப்பட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோல் தமிழகத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டு இருக்காங்கனு சொல்லுங்க, நான் பதில் சொல்றேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமடைந்தார் என குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

6 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

7 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

7 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago