கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 14 வயது சிறுவன் .!

Published by
murugan
  • கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • நேற்று புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார்.

செங்கல்பட்டு அடுத்து உள்ள வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா இவர்களுக்கு புருஷோத்தமன் என்ற 14 வயது மகன் உள்ளர்.இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி புருஷோத்தமனை காணவில்லை என அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல்துறை, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் கிணற்றில் மிதந்த உடல் காணாமல் போன புருஷோத்தமன் என கண்டுபிடிக்கப்பட்டது.

புருஷோத்தமன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா..?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புருஷோத்தமன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Published by
murugan
Tags: armsdeadwell

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

6 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

7 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

8 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

9 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

9 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

12 hours ago