காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது வாக்காளர்களுக்கு பணம் தர முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களிலேயே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது.
அந்தவகையில், வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூ.18.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேட்பாளர் சகோதரர் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், ரூ.18.41 லட்சம் பணம் காட்பாடி அருகே உணவகத்தில் பறிமுதல் செய்த நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு பண விநியோக விவரம் அடங்கிய பூத் சிலிப் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்துள்ளனர். தனக்கும் பறிமுதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு விளக்கமளித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…