தமிழகத்தில் 1,847 காவலர்கள் இடமாற்றம்! – டிஜிபி உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டில் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், குறிப்பாக ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.  அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளின் படி தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்களை இடமாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், பெண் காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை காவல்துறையில் மட்டும் 340 காவலர்கள், பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடம் மாற்றம் தொடர்பான பட்டியலை வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி தலைமை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

48 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago