அரிசி கடத்தல் தொடர்பாக 1918 வழக்குகள் பதிவு..!

From May 7 to August 17, 1918 cases of rice smuggling were registered in Tamil Nadu.

கடந்த மே 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் 1918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மே 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் 1918 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்பாக 66 வழக்குகளும், வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தகத்திற்கு பயன்படுத்தியதாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.