salem voter died [file image]
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்தவகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக Saksham-ECI எனும் செயலி மூலமும் அல்லது 1950 எனும் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி எண் மூலமாகவோ சிறப்பு வாகன வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சேலம் கெங்கவல்லி அருகே செந்தராபட்டி ஊராட்ச்சி தொடக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்ற 77 வயது மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததார்.
இதேபோன்று சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்ற சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் உயிரிழந்தார். பழனிசாமி தனது மனைவியுடன் வாக்களிக்க சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணமாக இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…