குழந்தைகளை பணியமர்த்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!-அமைச்சர் எச்சரிக்கை..!

Published by
Sharmi

14 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அமைச்சர் சி.வி. கணேசன் எச்சரித்துள்ளார்.

நேற்று சென்னையில் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பணித்திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. கிண்டி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். இதில் தொழிலாளர் நலன் துறை இயக்குனர் செந்தில் குமார், இணை இயக்குனர்கள் ஜவகர், சரவணன், குமார் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், இன்று கடைபிடிக்கப்படும் உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 14 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை யாரும் சட்டவிரோதமாக பணியமர்த்தினால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தேவைப்பட்டால், 20,000 முதல் 50,000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தமிழ்நாட்டில் இயங்கி வரும் கிட்டத்தட்ட 47,000 தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் விதமாக ஆலைகள் அமைந்துள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் குழு அமைத்து தீ விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 hour ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago