பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்திற்கு 25.14 லட்சம் நிதி உதவி… நெகிழவைத்த சம்பவம்…

Published by
Kaliraj

சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த, தலைமை காவலர் குடும்பத்திற்கு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள், 25.14 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணிபுரிந்தவர் சரவணகுமார், வயது 37. இவர், சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த   ஆகஸ்ட் 18ல் உயிரிழந்தார். இவருக்கு, இந்துமதி என்ற மனைவியும்,  கோபிகா, 11, பிரியங்கா, 9, என, இரண்டு மகள்கள் உள்ளனர். தமிழக காவல் துறையில், 2003ல், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த சரவணகுமார். இவரது குடும்பச் சூழலை அறிந்த, சரவணகுமாருடன் பணியில் சேர்ந்த, 5,000 காவலர்கள்  ‘வாட்ஸ் ஆப்’ குழு ஒன்றை துவங்கி, 25.14 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். அதில், 20 லட்சத்து, 90 ஆயிரத்து, 618 ரூபாய்க்கு, சரவணகுமாரின் இரு மகள்களின் பெயரில், எல்.ஐ.சி., பாலிசியாக காப்பீடு செய்து செலுத்தினர். மீதமுள்ள, 4 லட்சத்து, 23 ஆயிரத்து, 387 ரூபாயை, ரொக்கமாக, சரவணகுமாரின் மனைவி மற்றும் மகள்களிடம், சென்னை, வேப்பேரியில், காவல்துறை கண்காணிப்பாளர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாயிலாக, நேற்று வழங்கினர்மேலும், மூவர் பெயரிலும், 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடும் எடுத்துக் கொடுத்தனர். தன்னுடன் பணியில் சேர்ந்த சக காவலரின் குடும்பத்தை காப்பாற்ற, உடன் பணியில் சேர்ந்த அனைவரும் சேர்ந்து  எடுத்த முயற்சிக்கு, கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

Recent Posts

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

46 minutes ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

1 hour ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

2 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

2 hours ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

3 hours ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

3 hours ago