27 இடங்களை ஒதுக்குமாறு திமுகவிடம் காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும், 22 வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு நாளை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே நேற்று வரை சட்டப்பேரவையில் 18 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக கூறி வந்த திமுக, தற்போது சற்று முன்னேறி 22 வரை தருவதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆரம்பத்தில் 35 இடங்கள் கேட்டார்கள், பின்னர் படிப்படியாக குறைந்து 30 வரை வந்து, தற்போது 27 இடங்கள் போதுமானது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கிறார்கள். முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது 18 தொகுதிகள் தான் தர முடியும் என கூறிய திமுக, இப்பொது 22 வரை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 31 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்த காங்கிரஸ், 27 வரை பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்ட நிலையில், 22 தொகுதிகளில் இருந்து 27 தொகுதிகளுக்குள் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி உடனப்படு ஏற்படலாம் என்றும் நாளை இரவுக்குள் இதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டு, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால், இதற்கு அடுத்து எந்தெந்த தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால், முடிவு விரைவில் எட்டப்படும்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…