DMK Chief secretary Duraimurugan [File Image]
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 3 திமுக கவுன்சிலர்களை மற்றும் திமுக கட்சி பிரதிநிதி ஒருவர் என மொத்தம் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக அவ்வபோது ஒரு சில திமுக கவுன்சிலர்கள் போர்கொடி தூக்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் கூட மேயர் மற்றும் துணை மேயர் வராத காரணத்தால் திமுக கவுன்சிலர்கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டது அப்போது பேசுபொருளாக மாறியது
திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று – வானதி சீனிவாசன்
திமுக கவுன்சிலர்ளின் இந்த சம்பவங்களை தொடர்ந்து நேற்று திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி திமுக மாநகராட்சி 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7 வார்டை சேர்ந்த திமுக பிரதிநிதி சுண்ணாம்புமணி எனும் ஆர்.மணி ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சி கட்டுப்பாட்டு மீறி செயல்பட்டதாக கூறியும், கழகத்திற்கு அவபெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் கூறியும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…