ஊரடங்கு உத்தரவு மீறல் தொடர்பாக 33,006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவினை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் தமிழகத்தில் , ஊரடங்கு உத்தரவை மீறியதாக28,897பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.33006 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.23691 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் ரூ.13,99,800 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.