கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள்…! மேலும் 3 மாவட்டங்களுக்கு 150 செறிவூட்டிகள் அனுப்பி வைப்பு…! – தமிழக அரசு

Published by
லீனா

தமிழக அரசு சார்பாக கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு 50 செறிவூட்டிகள் வீதம், 150 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு 50 செறிவூட்டிகள் வீதம், 150 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம், அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தைச் (US-India Strategic Partnership Forum) சார்ந்த அமைப்பான, அமெரிக்க இந்திய நட்பு கூட்டணி (US-India Friendship Alliance), 486 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, தமிழ்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. சீனாவில் உள்ள ஃபோஷன் (Foshan) நகரிலிருந்து, வான்வழியாக புது தில்லிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் சரக்கு விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு தலா 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 336 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கோவிட் நிவாரண மையங்களில் பயன்படுத்தப்படும்.

அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தின் இந்த உதவிக்கு, தமிழ்நாடு அரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

8 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago