தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு ! கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு

Published by
Castro Murugan

தமிழகத்தில்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது .கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் இருந்து மூன்றிலக்கமாக மாறியுள்ளது.நேற்று மட்டும் சென்னையில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 316 ஆகும்.இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2644 ஆகும்.

 இதனிடையே இன்று காலை சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அதன்படி சூளைமேட்டை சேர்ந்த கோயம்பேடு சந்தை வியாபாரி (வயது 56) ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.இவரை போலவே சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். 

தாம்பரத்தை சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராயபேட்டையை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.இந்த மூதாட்டியின் குடும்பத்தில் உள்ள  5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 -ல் இருந்து 41 ஆக அதிகரித்துள்ளது.  

 

Published by
Castro Murugan

Recent Posts

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

9 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

45 minutes ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

2 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

3 hours ago