கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு!

Published by
Rebekal

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தற்பொழுது பலியாகியுள்ளனர்.கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயதுடைய கண்ணன் என்பவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்து குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேபோல 54 வயதுடைய பண்ருட்டி தட்டாஞ்சாவடி சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், வேம்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்த 55 வயதுடைய ரவிக்குமார் என்பவர், 45 வயதுடைய சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த மீனா ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ள நிலையில் இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

16 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago