நாமக்கல் மாவட்டம் அடுத்து சாணார்பாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி முனியப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 47 அடி உயரமுள்ள முனியப்ப சாமிக்கு திருவிழா நடைபெறுவதற்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த திருவிழாவிற்கு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சுமார் 260 கிடாய்கள் வெட்டப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு முனியப்பசாமிக்கு விருந்து படைக்கப்பட்டது.
அதன் பின்னர் படைக்கப்பட்ட உணவை அங்கு வந்த மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. சாமி தரிசனத்தை கண்ட மக்கள் முன்னியப்பசாமியின் பிரசாதத்தை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து இன்றும் முனியப்ப சாமிக்கு நாட்டுக்கோழி விருந்தும், சிறப்பு பூஜைகளும் நடக்க உள்ளது. இதனை காண ஏரளமான பக்தர்கள் முனியப்ப சாமி கோவிலுக்கு வந்துள்ளனர்.
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…