என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம்,நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதினார்கள்.அந்த கடிதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.ஆனால் இவர்கள் மீது வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறை தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது.இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், என் நண்பர்கள் 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை விரும்புகிறார், மாநிலங்களும், சட்டமும் அதை பின்பற்ற வேண்டாமா? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…