மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு ! மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை- ஹெச்.ராஜா

Default Image

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர்  கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள்  மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த வழக்கினை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை. வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 49 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மை அறியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்