நாளை கொண்டாணப்படும் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு உட்பட சிசிடிவி கேமரா மூலம் வாகன தணிக்கை, ரோந்து பணிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாளை 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாட்டத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றவுள்ளார். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது .
கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் இந்த சுதந்திர சுதந்திர தின விழாவில், கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களை கௌரவிக்கும் வகையில் முன்களப்பணியாளர்கள் சிலருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கவுள்ளார்.
இந்த நிலையில் கோட்டை முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை செயலபடவுள்ளது. எனவே விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் ஆயுதங்களுடன் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக சந்தையாக செயல்பட்டு வரும் விழுப்புரத்தில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…