தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து அவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செய்யப்பட்ட காரணத்தால் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
அதன்படி, முன்னாள் எம்பி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கு.பரசுராமன், எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் கோ.ராஜ்மோகன், தஞ்சை நகர கழக செயலாளர் வி.பண்டரிநாதன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர்எம் பாஸ்கர், ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அருள் சகாயகுமார் ஆகிய 5 பேர் இன்று முதல் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…