சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 5வது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முக்கிய பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இரு கட்சிகளில் சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தான நிலையில், சில கட்சிகளுடன் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், திமுக ஒரு பக்கம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய நேர்காணல் தொடர்ந்து இன்று 5வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடையும் என கூறப்படுகிறது. திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, அதிமுக பொறுத்தளவில் சுமார் 8,000 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிந்துவிட்டது. இதையடுத்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…