பிச்சைக்காரர்கள் தங்கும் விடுதியாக மாறிய பள்ளிக்கூடம்! மீட்டு தாருங்கள்! 6 வயது சிறுமி நீதிமன்றத்தில் வழக்கு!

Published by
மணிகண்டன்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் ஊராட்சியில் வசித்து வருபவர் பாஸ்கரன் அவரது மகள் 6 வயதே ஆன அதிகை முத்தரசி. இந்த முத்தரசி மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை உருவாக்கி தர வேண்டும். அந்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதற்காக அவளின் தந்தையுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில்,  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் கோயில் உள்ளதால் அங்குள்ள பிச்சைக்காரர்கள் அருகில் இருக்கும் இந்த பள்ளிக்கூடத்தை தங்கும் இடமாக மாற்றி விட்டதாகவும், மேலும் அங்கு சட்ட விரோதமான பல சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால் அங்குலல்ல ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி விட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியை மேம்படுத்த கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  மேலும் இந்த புகார் குறித்து ஏற்கனவே பிப்ரவரி மார்ச் மாதங்களில் அரசு அலுவலங்களில் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், இந்த வழக்கு குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும் எனவும்,  அக்டோபர் 16ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி, பொன்னேரி தாலுக்கா கல்வி அதிகாரி, மீஞ்சூர் கல்வி அதிகாரி என அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

10 hours ago