TNSTC - Special Bus [File Image]
வார இறுதி நாள் மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இன்று கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களுக்கு 300 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரு தினங்கள் விடுமுறை நாட்கள் என்பதால், வார இறுதி நாளான இன்று பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு போக ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வார இறுதியில் பயணிக்க இதுவரை 5,303 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9ம் தேதி முதல் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…