வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை.! 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள் தீவிர ஆலோசனை.!

Published by
மணிகண்டன்

சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்),  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என 4 மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இத்தகைய பாதிப்புகளை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் வெகுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருமழை, வெள்ளம் ஏற்பட்டால் அவை மழைநீர் வடிகால் வழியாக கடலுக்கு சென்றடைய ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு என 7 அமைச்சர்களும், தயாநிதி மாறன் உள்ளிட்ட 3 திமுக எம்பிகளும், சென்னை மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த பகுதி எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளையும், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னை வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பேரிடர் மீட்புத்துறை மற்றும் சென்னை மெட்ரோ துறையினரும் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு போல பெருவெள்ளம் ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ,  மழைநீர் வடிகால் பணிகள் என பல்வேறு விவகாரங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago