70 வயதுவரை நடித்து முடித்தவர்களே ஆட்சிக்கு வர விரும்பும் போது வி.சி.க. ஏன் வரக்கூடாது.? – திருமாவளவன்

Published by
Dinasuvadu desk
  • நேற்று திருச்சியில் வி.சி.க சார்பாக குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
  • அப்போது பேசிய திருமாவளவன் 70 வயதுவரை நடித்து முடித்த அவர்களே ஆட்சிக்கு வர விரும்பும் போது 30 ஆண்டுகளாக மக்களுக்கு தொண்டாற்றும் வி.சி.க ஏன் ஆட்சி வரக்கூடாது..? என கேள்வி எழுப்பினார்.

நேற்று திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பட்டியலினத்தவர் நீதிபதியாவது யார் போட்ட  பிச்சை அல்ல. அது அரசியலமைப்பின் சட்டம் தந்த உரிமை எனக் கூறினார்.அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவை விடுதலை சிறுத்தை கட்சி தீர்மானிக்கும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறும் கோஷம் போடும் கட்சியாக இனி எந்த கட்சியும் நினைக்க வேண்டாம். கோட்டையில் கொடியேற்றும் கட்சியாக மாறி வருகிறது என கூறினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன் 70 வயதுவரை நடித்து முடித்த அவர்களே ஆட்சிக்கு வர விரும்பும் போது 30 ஆண்டுகளாக மக்களுக்கு தொண்டாற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஏன் ஆட்சி வரக்கூடாது..? என கேள்வி எழுப்பினார். மேலும் டெல்லியில் அடுத்த மாதம் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்த உள்ளார். அந்த பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சி கலந்து கொள்ளும் என திருமாவளவன் கூறினார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago