திமுக பேரணியில் கொடி பிடித்த 85 வயது முதியவர்.!

Published by
murugan
  • குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி நடைபெற்றது.
  • இந்த பேரணியில் ஓசூரை சார்ந்த நாராயணப்பா என்ற 85 வயது முதியவர் கலந்து கொண்டு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தார்.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் பேரணி நடைபெற்றது . இந்த பேரணி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்தது. இதையடுத்து பேரணி நடைபெறும் இடத்திற்கு மு.க ஸ்டாலின் காலை10.20 மணிக்கு  வந்தார்.

பின்னர் மு.க ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணியாக சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெற்றது.

பேரணியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும்  குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.இந்தப் பேரணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பா என்பவர் கலந்து கொண்டார்.நாராயணப்பா பேரணியில் கலந்து கொண்டதால் பலரை நெகிழ்ச்சி அடையவைத்தது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டது குறித்து பேசிய நாராயணப்பா”ஓசூரில் இருந்துரயில் மூலம் இன்று காலை சென்னை வந்தேன். பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருக்கிறேன். எனக்கு 85 வயதாகிறது. கருணாநிதிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.

கருணாநிதி இல்லையென்றாலும் எங்களுக்கு ஸ்டாலின் உள்ளார். கருணாநிதி ,ஸ்டாலின் இருவரும் ஒன்றுதான்.  திமுகவின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன்” எனத் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

17 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

28 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

41 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago