ஒரே நாளில் கோவையில் 978 ஊரடங்கு வழக்குகள்..!

Published by
Sharmi

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது கோயம்பத்தூர். இங்கு ஒரே நாளில் 978 ஊடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஊரடங்கில் தேவையின்றி வெளியில் செல்பவர்கள் மீது கோவை காவல் துறையினர் நேற்று ஒரே நாளில் 978 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கோவையில் தொற்று எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஊரடங்கின் நோக்கம் புரியாமல் மக்கள் வெளியே சுற்றி திரிகின்றனர்.

இதனால் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 180 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 42 பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. மேலும், ஊரடங்கில் விதியை மீறி தேவையின்றி வாகனத்தில் சென்ற 600 பேர் மீதும், அத்யாவசிய தேவை இல்லாமல் வெளியில் வாகனத்தில் சுற்றி திரிந்த 156 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் கோவையில் நேற்று ஒரு நாளில் 978 ஊரடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது.

இவ்வழக்குகளின் சார்பில் 203 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் கோவை காவல் துறையினர், கொரோனாவிலிருந்து காப்பாற்றி கொள்ள வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

11 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

11 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

12 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

13 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

14 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

14 hours ago