வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு!

Published by
லீனா

வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகாமையில், உள்ள வீட்டில் அடிக்கடி விஷபாம்புகள் வந்து போவதால், இவர் தனது கடைக்குள் வராமல் இருப்பதற்காக, வலை ஒன்றை  அமைத்துள்ளார்.

இன்று காலை அந்த வலையினுள், 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து, வலையினுள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை மீட்க ராஜசேகர் முயற்சித்துள்ளார். பாம்பை மீட்க முயன்ற ராஜசேகரை அந்த பாம்பு கடித்துள்ளது. அது கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பதால், விஷம் ராஜசேகரின் உடல் முழுவதும் பரவியுள்ளது.

இதனையடுத்து, அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

10 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

23 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

11 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

12 hours ago