வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகாமையில், உள்ள வீட்டில் அடிக்கடி விஷபாம்புகள் வந்து போவதால், இவர் தனது கடைக்குள் வராமல் இருப்பதற்காக, வலை ஒன்றை அமைத்துள்ளார்.
இன்று காலை அந்த வலையினுள், 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து, வலையினுள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை மீட்க ராஜசேகர் முயற்சித்துள்ளார். பாம்பை மீட்க முயன்ற ராஜசேகரை அந்த பாம்பு கடித்துள்ளது. அது கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பதால், விஷம் ராஜசேகரின் உடல் முழுவதும் பரவியுள்ளது.
இதனையடுத்து, அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…