சனாதன விவகாரத்தில் உச்சநீதிமன்ற நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படும்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.!

Published by
மணிகண்டன்

சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அவர், சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சனாதனம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளனர். சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சனாதன சர்ச்சை விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சனாதன சர்ச்சை குறித்து இன்னும் உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்தவுடன் உரிய விளக்கம் அளிப்போம். நாங்கள் நீதிமன்றத்தை நம்புகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

6 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

6 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

7 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

7 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

8 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

15 hours ago