அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தை! நெஞ்சை பத பதைக்க வைக்கும் வீடியோ!

Published by
பால முருகன்

Chennai : அடுக்குமாடிக் குடியிருப்பின் மேற்கூரையில் சிக்கி, உயிருக்குப் போராடிய குழந்தையைப் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை மாவட்டம் ஆவடி திருமுல்லைவாயின் பூம்பொழி நகரில் அமைந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பச்சிளம் குழந்தை ஒன்று தவறி கீழே இருந்த தகர சீட்டில் விழுந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியுள்ளது.

அந்த குழந்தை தகர சீட்டில் கீழே விழும் நிலைக்கு சென்றபோது அக்கம் பக்கத்தினர் பார்த்து ஒன்றாக இணைந்து அந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.  குழந்தை மெல்ல மெல்ல அந்த தகர சீட்டில் இருந்து கீழே விழ முயன்றது. இதனை பார்த்த பலரும் கீழே பெரிய போர்வை ஒன்றை எடுத்துக்கொண்டு நீளமாக விரித்து குழந்தை கீழே விழுந்தால் அப்படியே பாதுகாப்பாக பிடித்துக்கொள்ளலாம் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

அதைப்போல மேலும் சிலர் குழந்தையை மேலே ஏறி தூக்கிவிடலாம் என்று கம்பியை பிடித்து மேலே எற முயற்சி செய்தனர்.  அப்போது சரியாக ஒருவர்  ஜன்னலில் இருந்து மேலே ஏறி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தார். குழந்தையும் சரியாக தவழ்ந்து கீழே வந்தது அந்த நபரும் சரியான நேரத்தில் மேலே ஏறி சரியான நேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக தூக்கினார். இதனால் குழந்தையின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தை சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த மக்கள் பலரும் இந்த குழந்தையின் தாய் -தந்தைக்கு இவ்வளவு அலட்சியமா? என்றும் தங்களுடைய கேள்விகளை எழுப்பிக்கொண்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 minutes ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 minutes ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

56 minutes ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

1 hour ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

3 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

3 hours ago