தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதற்கு முன் மருத்துவக்குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரம் அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில், 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கும் எனவும் முதல் வாரம் தீவிர ஊரடங்கையும், இரண்டாவது வாரம் தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…