அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு.? கலெக்டரிடம் புகார் அளித்த மாடுபிடி வீரர்.!

Published by
மணிகண்டன்

கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

கீழக்கரை ஜல்லிக்கட்டு – இன்று முன்பதிவு தொடக்கம்.!

இதனை தொடர்ந்து, தான்தான் அதிக காளைகளை அடக்கியதாகவும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அபி சித்தர் முன்வைத்து இருந்தார். இதுகுறித்து தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அபி சித்தர் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கார்த்திக்கு 3 சுற்றுகள் வரை விளையாட அனுமதிக்கப்பட்டது. இறுதி சுற்றில் தான் அதிக காளைகளை அடக்கினேன். ஆனால் , முதற்பரிசு கார்த்திக்கு வழங்கப்பட்டது. எனக்கு முதற்பரிசு கார் தேவையில்லை . ஆனால் நான் தான் வெற்றியாளர் என அறிவித்தால் மட்டும் போதும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் அபி சித்தர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாவும், ஜனவரி 24இல் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இதுகுறித்து மனு அளிக்க உள்ளதாகவும் அபி சித்தர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

44 minutes ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

1 hour ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

2 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

2 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

4 hours ago