தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டர் ஃபையர்மேன் பதவிகளுக்கான 8,826 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகியது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்து உள்ளதாக கூறி புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வானதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 0610531 முதல் 0610798 வரை உள்ள ஓரிரு எண்களை தவிர மற்றவை தேர்வாகி இருப்பதால் சந்தேகம் என புகார்.
இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகளிடம் கேட்டபோது இது தேர்வானவர்களின் பட்டியல் இல்லை . இது எழுத்துத் தேர்வின் முடிவுகள் மட்டுமே என்று அவர்கள் கூறியுள்ளனர். மொத்தமாக 8826 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு பணியிடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் 47 ஆயிரம் தேர்வாகி இருக்கிறார்கள். அந்த எழுத்து தேர்வில் தேர்வர்கள் தொடர்ந்து தேர்வாகி இருக்க காரணம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு பிரிவிற்கும் மாறுபடும் என கூறியுள்ளனர்.
மேலும் எழுத்து தேர்விற்கு பிறகு உடற்தகுதி போன்றவை உள்ளது .இவை அனைத்தும் முடிந்து இறுதி முடிவு வரும்போது தேர்வர்கள் தொடர்ந்து தேர்வாகி இருந்தால் முறைகேடு நடந்தஇருக்க வாய்ப்பு உள்ளது என கூறலாம். ஆனால் இப்போதுதே முறைகேடு நடந்து உள்ளதாக கூறுவது தவறு என கூறினர் .
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…