பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற தந்தை!தடுக்க வந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் ஏற்பட்ட கொடுமை!

Published by
Sulai
  • பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி.
  • வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ஆவார்.இவரது மனைவி பாக்கியலட்சுமி ஆவார்.இவர்களது மகன் சாய்குமார்.இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.அப்போது தீபிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதை அறிந்த தீபிகாவின் தந்தையும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான பாலகுமார்.அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணியில் குடிப்பெயர்ந்துள்ளார்.

அங்குள்ள தனியார் கல்லூரியில் தீபிகா படித்து வந்துள்ளார்.பின்னர் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் வைத்து சாய் குமாரை திருமணம் செய்துள்ளார்.பின்னர் 2 மாதங்கள் கழித்து இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பினியாக உள்ள தீபிகாவை காண பாலகுமார் சாய்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து உள்ளே நுழைந்த பாலகுமார்,அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் வீட்டிற்கு வருமாறு தீபிகாவிடம் கூறியுள்ளார்.

இதற்கு தீபிகா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் அவருடன் வந்த 4 பேர் கையில் வைத்திருந்த ரசாயன பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்தில் பூசியுள்ளனர்.இதனை தடுக்க வந்த தீபிகாவின் மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் மற்றொரு மருமகள் சந்தியா மீதும் பூசிவிட்டு தீபிகாவை கடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாய் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தகவல் அறிந்த பாலகுமார் தீபிகாவை வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றன.இதன் காரணமாக தீபிகாவிடம் மேற்கொண்ட விசாரணையில் வீட்டிற்கு வரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக தந்தை மிரட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

17 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

38 minutes ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

39 minutes ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

54 minutes ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

2 hours ago