சரத்குமார் : நடிகரும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டுள்ளார். இதனையடுத்து, சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே தேர்தலின் போது தீவிரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான கருத்து கணிப்பு முடிவுகளும் கடந்த சனிக்கிழமை வெளியானது.
இந்த நிலையில், தேர்ததலில் தன்னுடைய மனைவி ராதிகா வெற்றிபெறவேண்டும் என்று சரத்குமார் கோவிலில் அங்கப் பிரதிஷ்டம் செய்துகொண்டார். இன்று காலை விருதுநகரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் இருவரும் வருகை தந்தனர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குளை பெற்று வெற்றிபெற வேண்டியும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டியும் அங்கபிரதட்சணம் செய்துகொண்டார். அது மட்டுமின்றி, கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்வில் மனைவி ராதிகா மற்றும் பாஜகவினரும் கலந்துகொண்டார்கள்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…