vijay and Anbumani Ramadoss [File Image]
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைமுன்னிட்டு இன்று அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் பாமக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி அவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், குடியரசு தலைவர் திரௌபதிமுர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களின் மூலம் அன்புமணி ராமதாஸ்க்கு தெரிவித்து இருந்தார்கள்.
அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் அன்புமணி ராமதாஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்புமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை விஜய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் நிலையில்,தற்போது டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இதைப்போலவே கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சயின் தலைவர் திருமாவளவனுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…