RTE School admission [File Image]
RTE : தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
கல்வியை அடிப்படை உரிமையாக கொண்டுள்ள நமது நாட்டில் அனைத்து குழந்தைகளும் அரசு – தனியார் என எந்த பாகுபாடுமின்றி கல்வியை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி உரிமை சட்டம் (RTE – Right to Education Act) கடந்த ஆகஸ்ட் 4, 2009இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. 2013ஆம் ஆண்டு இந்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 6 முதல் 14 வயது வரையில் (1 முதல் 8ஆம் வகுப்பு வரை) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை எந்தவித கல்வி கட்டணமும் இன்றி பள்ளியில் சேர்க்கபடுவர். இதற்காக rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதற்கான கட்டணத்தை மாநில அரசு, தனியார் பள்ளிகளுக்கு அளிக்கும்.
இன்று (ஏப்ரல் 22) முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் உரிய ஆவணங்கள் கொண்டு விண்ணப்பித்த உடன், அவர்கள் மொபைல் எண்ணிற்கு SMS குறுஞ்செய்தி வரும். பள்ளிகளுக்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் இறுதியில் குலுக்கல் அல்லது முன்னுரிமை முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
RTE மாணவர் சேர்க்கை மூலம் தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதுவரையில் சுமார் 4.6 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…