23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநிலங்களவையில் ஒலிக்கிறது பார்லிமென்ட் டைகரின் குரல்

Published by
Venu

23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் மாநிலங்களவைக்கான தேர்தல்  ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி அவர் வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

ஆனால்  தேசத்துரோக வழக்கின்  தண்டனை காரணமாக  மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?என்ற சந்தேகம் அதிகம் இருந்து வந்தது .இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என் .ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.பின்  வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.இதில் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட  6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதனால் 6 பேருக்கும் மாநிலங்களவை எம்.பி.க்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.  வைகோவும் தனது மாநிலங்களவை எம்.பி.க்கான சான்றிதழை பெற்றுவிட்டார்.ஏற்கனவே  மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் , இருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வைகோ.23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மாநிலங்களவைக்கு  தேர்வாகி உள்ள நிலையில் அங்கு தனது சூறாவளி பேச்சை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. வைகோவின் அனல் பறக்கும் பேச்சு காரணமாக  பார்லிமென்ட் டைகர் என்றும் அவரை புகழ்வார்கள்.

Published by
Venu

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

3 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

4 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

5 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

5 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

6 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

7 hours ago