chennai heavy rains [file image]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முதல் விடிவிடிய கனமழை பெய்து வருவதால் சென்னை பல்வேறு பகுதியில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னையே மலையில் தத்தளித்து வருகிறது.
இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது. மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புயல் எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாமல் அதி கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை..! தரையில் இறங்கிய அடுக்குமாடி கட்டடம்..!
இதில் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்கள் எல்லாம் தண்ணீர் அடித்து செல்லும் காட்சியும் வெளியாகியுள்ளது.
கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது, தவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 34 செமீ மழை பதிவாகியுள்ளது. 1976ம் ஆண்டு ஒரே நாளில் 47 செ.மீ மழை பதிவாகி இருந்த நிலையில், தற்போது இன்று காலை வரை அதாவது கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 34 மழை பதிவாகியுள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ல் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது 33 செ.மீ மழை பெய்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிகமாக 34 செ.மீ மழை பொழிந்துள்ளது. மேலும், சென்னையில் இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் என படிப்படியாக இரவுக்கு பிறகு மலை குறையும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…