புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்த அதிமுக..!

Published by
murugan

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலைதொடர்ந்து அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், அதிமுக சார்பில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரியில்‌ உள்ள 5 நகராட்சிகள்‌ மற்றும்‌ 10 கொம்யூன்‌ பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ வருகின்ற அக்டோபர் 21,25 மற்றும் 28 ஆகிய தேதிகளில்‌ மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காகவும்‌,

கூட்டணிக்‌ கட்சிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தி, கழகம்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகள்‌ போட்டியிடும்‌ இடங்களை தேர்வு செய்வதற்காகவும்‌, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகளின்‌ வேட்பாளர்கள்‌ வெற்றிபெறும்‌ வகையில்‌ தேர்தல்‌ பணிகளை மேற்கொள்வதற்காகவும்‌, புதுச்சேரி மாநில தேர்தல்‌ பணிக்குழுப்‌ பொறுப்பாளர்கள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், புதுச்சேரி மாநில (கிழக்கு) கழகச்‌ செயலாளர்‌ அன்பழகன், புதுச்சேரி மாநில (மேற்கு) கழகச்‌ செயலாளர்‌ ஓம்சக்தி சேகர்‌, காரைக்கால்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ v.ஓமலிங்கம்‌

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்‌ பொறுப்பாளர்களோடு, புதுச்சேரி மாநிலம்‌ (கிழக்கு, புதுச்சேரி மாநிலம்‌ மேற்கு) மற்றும்‌ காரைக்கால்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ இணைந்து, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றிடும்‌ வகையில்‌, சிறந்த முறையில்‌ தேர்தல்‌ பணிகளை ஆற்றிட வேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

17 minutes ago

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

1 hour ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

2 hours ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

2 hours ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

2 hours ago

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

3 hours ago