தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கடந்த இரு நாட்களாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து பாஜவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.
அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுலபமான முடிவு எட்டாததால், இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே எண்ணிக்கையை விடத் தொகுதிகளே பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தித்தனர். அந்தப் பேச்சுவார்த்தையில் அதிமுக 20 லிருந்து 22 தொகுதிகள் வரை தரத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…