மதுரை: முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு மதுரையில் நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.அதில் முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும். இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்று கூறினார்.
மதுரையில் முத்தரையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.இந்த மாநாட்டிற்கு வீர முத்தரையர் முன்னேற்றச் சங்க நிறுவனர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,முத்தரையர்கள் பெருமைக்குரியவர்கள்.
கலை, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள். மண்ணையும், மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்குகின்றனர்.நானும் ஒரு விவசாயி என்பதால், முத்தரையர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்கப்படும்.முத்தரையர் சமுதாய மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு அரசு துணை நிற்கும் என்றார்.
இந்த அரசு மக்களுடைய அரசு என்றும் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு.அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடைய செய்யவேண்டும்.அவர்களுக்கு தேவையான கல்வி ,வீடு ,சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு எங்களுடைய அரசு செயலாற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், விஜயபாஸ்கர் ,செல்லூர் ராஜு,திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…