அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், 2021 ஜூன் 20-ம் தேதி மணிகண்டன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மணிகண்டனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி நிபந்தையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…