ஆரம்பமே அதகளம்… அதிமுக செயற்குழு கூட்டத்தில் ‘முகப்பு’ டிவிஸ்ட்.!

Published by
மணிகண்டன்

இன்று சென்னை வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று தற்போது அதிமுக தொண்டர்கள், முக்கிய பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

அதிமுக கொடி தான்…  எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்..! ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி.! 

இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதற்கேற்றாற்போல இன்றைய அதிமுக கூட்டத்தின் முகப்பு தோரணங்கள் எல்லாம் பழைய பாராளுமன்ற கட்டம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டட முகப்பு அலங்காரம் தான் தற்போது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, பழைய பாராளுமன்ற கட்டடம் தற்போது புழக்கத்தில் இல்லை. ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது. அதில் தான் இறுதியாக குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. ஏற்கனவே , தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி முறிந்து இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக தரப்பினரும் அதிகாரபூர்வமாக தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் பாஜக அரசு கட்டமைத்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை தவிர்த்து பழைய நாடாளுமனற கட்டடத்தை முகப்பு தோரண படமாக  வைத்து இருப்பது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பதை தெளிவுபடுத்துகிறது போல உள்ளது என அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவுகிறது.

அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த செயற்குழு ,பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வரவுள்ளார். முதலில் செயற்குழுவில் பிரதான கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. பின்னர் அந்த முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago