மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் கேள்வி…!

Published by
Edison

அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி,கடந்த ஆண்டு திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த இடஒதுக்கீடு வழக்கை முன்னதாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு எவ்வாறு அமல்படுத்தப்படும் என கேள்வி எழுப்பியது. மேலும்,இது தொடர்பாக மத்திய அரசு  விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து,எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில்,திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,அகில இந்திய ஒதுக்கீடு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய நிலையில்,தமிழக அரசின் இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும்? உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும்,இடங்கள் நிரப்பப்பட்டு மீண்டும் மாநில அரசுக்கு திரும்ப வழங்கினால் மட்டுமே  இட ஒதுக்கீட்டை பின்பற்ற முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து,அகில இந்திய இடஒதுக்கீட்டு இடங்களில் SC,ST போன்ற பட்டியலின பிரிவுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது.ஆனால்,ஓபிசி பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் மட்டும் மாநில அரசின் இடஒதுக்கீட்டையே பின்பற்ற படவேண்டும் என தமிழக அரசு கோருவது ஏன்? என்று மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பபட்டது.

இதனையடுத்து,திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது என்று, எனவே அந்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும”,என்றும் தெரிவித்தார்.

இதனால்,நீதிபதிகள் இந்த வழக்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago