சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை என அமைச்சர் தகவல்.
நெல்லையில் இயங்கி வரும் சாஃப்டா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி கழிப்பறை சுவா் இடிந்து விழுந்ததில் அந்தப் பள்ளி மாணவா்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில் 4 மாணவா்கள் காயமடைந்தனா். இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆரிசியர் உள்ளிட்ட ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள உறுதி தன்மையற்ற பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அருகாமையில் பள்ளி இல்லையென்றால் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…