திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக, திமுகவுக்கு மாற்று கட்சியாக அமமுக வரும். ரூ.1000, ரூ.1,500 தருவோம் என ஏலம் போடுகிறார்கள். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என குற்றசாட்டியுள்ளார். எங்களால் செய்ய முடிந்தவற்றை, சொல்கிறோம். மற்றவர்களை போல் பொய் சொல்லவில்லை என கூறியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது என்று விமர்சித்துள்ளார். சமீபத்தில் கரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள் எனவும் அவர் கூறியது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…