VCK Leader Thirumavalavan [File Image]
Election2024 : தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக போட்டியிடுகிறது. கடந்த முறை விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் (திமுக) சின்னத்திலும், சிதம்பரத்தில் திருமாவளவன் விசிக சின்னமான பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.
இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடபோவதாக விசிக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பானை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை விசிக அணுகி இருந்தது. இந்த கோரிக்கையில் பதில் கூறியிருந்த தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை விசிகவுக்கு ஒதுக்க முடியாது என கூறியிருந்தது. கடந்த தேர்தலில் 1 சதவீதம் கூட வாக்கு வாங்கவில்லை (தமிழகம் முழுவதும்). 3 ஆண்டுகளாக கட்சி கணக்கு வழக்குகளை ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் கூறியிருந்தது.
இதனை அடுத்து, மீண்டும் தேர்தல் ஆணையத்தை விசிக அணுகியுள்ளது. கடந்த கால சட்டமன்ற தேர்தல்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 1.16 சதவீத வாக்குகள் மேலே பெற்றுள்ளோம். கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றோம். அதற்கான வாக்கு விகிதம் கணக்கிடப்படவில்லை. இந்த முறை தமிழகம் , கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என 5 மாநிலத்தில் தேர்தலில் விசிக போட்டியிடுகிறது என பல்வேறு கோரிக்கைகளை கூறி பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விசிக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…